Wednesday 21 February 2018

வாத்தியார்

                                        வாத்தியார் 

பள்ளிக் கூட  வாத்தியாரு போறாரு பாரு 
அவரு  கையில் ரெண்டு புத்தகத்தை வச்சிருக்காரு 
அம்மையப்பன் போல நமக்கு விளங்கிடுவாரு - அவரு 
நம்ம கைய புடிச்சு வாழும் வழி காட்டிடுவாரு 

விளங்காத  பாடம்   சொல்லித் தந்திடுவாரு 
வகுப்பறையில்   கதைகள்   சொல்லி  சிரிக்க வைப்பாரு 
தவறு செய்யும் போதில் நம்மை எச்சரிப்பாரு -இவரு 
தகப்பனாரு போல நம்ம அரவணைப்பாரு 

செல்லக்   குறும்பு செய்கையில் ரசிச்சிடுவாரு 
செயலில் வீரராக நம்மை உயர்த்திடுவாரு 
நமக்கு இருக்கும் கலைத் திறமையக்  கண்டறிவாரு -அதை 
வளர்த்து நாமும் உச்சம் தொட துணையிருப்பாரு 

வகுப்பறையின் தூய்மையினைப் பேணிடுவாரு 
குறித்த நேரம் வருகை தந்து காத்திருப்பாரு 
கையில் பிரம்பு வைத்திருந்தும் அடிக்க மாட்டாரு -தன் 
மாணவரின் கனவைக் கண்ணில் சுமந்திருப்பாரு !





No comments:

Post a Comment