வாத்தியார்
அவரு கையில் ரெண்டு புத்தகத்தை வச்சிருக்காரு
அம்மையப்பன் போல நமக்கு விளங்கிடுவாரு - அவரு
நம்ம கைய புடிச்சு வாழும் வழி காட்டிடுவாரு
விளங்காத பாடம் சொல்லித் தந்திடுவாரு
வகுப்பறையில் கதைகள் சொல்லி சிரிக்க வைப்பாரு
தவறு செய்யும் போதில் நம்மை எச்சரிப்பாரு -இவரு
தகப்பனாரு போல நம்ம அரவணைப்பாரு
செல்லக் குறும்பு செய்கையில் ரசிச்சிடுவாரு
செயலில் வீரராக நம்மை உயர்த்திடுவாரு
நமக்கு இருக்கும் கலைத் திறமையக் கண்டறிவாரு -அதை
வளர்த்து நாமும் உச்சம் தொட துணையிருப்பாரு
வகுப்பறையின் தூய்மையினைப் பேணிடுவாரு
குறித்த நேரம் வருகை தந்து காத்திருப்பாரு
கையில் பிரம்பு வைத்திருந்தும் அடிக்க மாட்டாரு -தன்
மாணவரின் கனவைக் கண்ணில் சுமந்திருப்பாரு !
No comments:
Post a Comment