இரவு எழுதிய கவிதை
மங்கையர் முகமது உவமை கூறிட
வானது தந்திடும் ஓர் கொடையோ
மாதம் இருமுறை வளர்ந்தும் தேய்ந்தும்
வாழ்வது உணர்த்திடும் தத்துவமோ
ஏழைகள் இல்ல இருளது நீக்கிட
இலவச ஒளியுமிழ் விளக் கதுவோ
ஏகன் தன்முடி அணியாய்த் தரித்திடும்
மூன்றாம் பிறையாம் நிலவதுவோ
ஏழிரு நாட்கள் வளர்ந்து மறுநாள்
வெண்சுடர் வீசிடும் பௌர்ணமியோ
ஏழிரு நாட்கள் தேய்ந்து அமா
வாசையாய் இருண்டிடும் கோளதுவோ
நம்மனம் கொண்ட தனிமை நீக்கிட
இரவினில் துணைவரும் நட்பதுவோ
நாடெல்லாம் தாண்டக் கடவுச் சீட்டே
தேவைப் படாத பறவை யதோ
காரிருள் கூந்தலில் விண்மீன் வைரங்கள்
பூட்டி ஒளிர்ந்திடும் பெண்ணனங்கோ
கவின்மிகு குமுத மலரது மலரத்தன்
கிரணக் கரம்தரும் தாயவளோ
காதலர்க் கெல்லாம் உணர்வினைத் தூண்டிட
காலம் ஏற்றிய விடிவிளக்கோ
கவிகளுக் கெல்லாம் கருப் பொருளாக
இரவது எழுதிய கவிதையிதோ
மங்கையர் முகமது உவமை கூறிட
வானது தந்திடும் ஓர் கொடையோ
மாதம் இருமுறை வளர்ந்தும் தேய்ந்தும்
வாழ்வது உணர்த்திடும் தத்துவமோ
ஏழைகள் இல்ல இருளது நீக்கிட
இலவச ஒளியுமிழ் விளக் கதுவோ
ஏகன் தன்முடி அணியாய்த் தரித்திடும்
மூன்றாம் பிறையாம் நிலவதுவோ
ஏழிரு நாட்கள் வளர்ந்து மறுநாள்
வெண்சுடர் வீசிடும் பௌர்ணமியோ
ஏழிரு நாட்கள் தேய்ந்து அமா
வாசையாய் இருண்டிடும் கோளதுவோ
நம்மனம் கொண்ட தனிமை நீக்கிட
இரவினில் துணைவரும் நட்பதுவோ
நாடெல்லாம் தாண்டக் கடவுச் சீட்டே
தேவைப் படாத பறவை யதோ
காரிருள் கூந்தலில் விண்மீன் வைரங்கள்
பூட்டி ஒளிர்ந்திடும் பெண்ணனங்கோ
கவின்மிகு குமுத மலரது மலரத்தன்
கிரணக் கரம்தரும் தாயவளோ
காதலர்க் கெல்லாம் உணர்வினைத் தூண்டிட
காலம் ஏற்றிய விடிவிளக்கோ
கவிகளுக் கெல்லாம் கருப் பொருளாக
இரவது எழுதிய கவிதையிதோ
No comments:
Post a Comment