Friday 22 August 2014

பள்ளிக்கல்வியின் இன்றைய நிலை

மாணவர் பணி ...மகத்தான பணி .
மாணவன் என்போன் மாண்புடையோன்.
ஆனால் இன்றைய மாணவர்களின் மாண்பு கேள்விக் குறியாகிக் கொண்டு வருகின்றது.
           மாணவர்கள் அனைவரும் மதிப்பெண்களைத் துரத்துகிறார்கள் .அப்படி மதிப்பெண்களை குறிவைத்து அவர்களை விரட்டுவது யார் தெரியுமா...?
பள்ளி நிர்வாகம் ,தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள்,பெற்றோர்...ஏன் அரசே கூட மாணவர்களை மதிப்பெண்களைக் குறி வைத்துதான் விரட்டுகிறது .மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள், நோட்டுகள் ,வண்ணப்பெட்டிகள், வரைகநிதப்பெட்டிகள், படப் பயிற்சி ஏடுகள்,அறிவியல் செய்முறைப் பயிற்சி ஏடுகள் ,மிதிவண்டி ,லேப் டாப் ,மதிய உணவு, சீருடை ,கல்வி உதவித்தொகை இன்னும் பல கணக்கில்லாத பொருட்கள் அனைத்தையும்  இலவசமாக அளிப்பதன் மூலம் பெற்றோகளின் அத்தனை சுமைகளையும் தான் ஏற்றுக்கொண்டதன் மூலம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தாம் செய்ய வேண்டிய கடமையினை மறக்கடித்த ..ஏன் மழுங்கடித்த பெருமை நம் அரசையே சாரும்.அது மட்டுமல்ல .தம் பிள்ளைகளின் கல்விக்காக சாதாரணன் செய்ய வேண்டிய கடமையை ,,அதற்கான தொகையை அரசு மதுக்கடைகளை நோக்கி மடை மாற்றிய பெருமையும் அரசையே சேரும்.
          அது மட்டுமா ....மாணவனுக்கு வங்கி கணக்கு துவங்க வேண்டுமா ... வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிய வேண்டுமா ...இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டுமா ... சாதி சான்றிதழ் வழங்க வேண்டுமா ... இலவச புத்தகங்கள் ... நோட்டுகள்... சீருடைகள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட குடோனில் இருந்து கொண்டு வரவேண்டுமா ...அவற்றை பட்டுவாடா செய்ய வேண்டுமா ...சாதி வாரியாக ...இன வாரியாக ...பால் வாரியாக ....மாற்றுதிரனாளிகள் பட்டியல் வாரியாக ...அரசு வழங்கும் இலவசப் பொருட்களை பெற்ற பயனாளிகளின்  பெயர்கள் வாரியாக புள்ளி விபரங்களை கேட்கும்போதெல்லாம் அள்ளி அள்ளி தெளிக்க வேண்டுமா ...கூப்பிடு ஆசிரியர்களை ... !இதெல்லாம் செய்தது போக மீதம் நீரம் கிடைத்தால் ஆசிரியர்கள் பாடம் நடத்தலாம் .நடத்தாமல் போகலாம். ஆனால் பாடம் நடத்தியதாக நோட்ஸ் ஆப் லெசன் -பாடக் குறிப்பேடு -இருந்தால் போதுமானது .எல்லாம் ரெக்கார்டாக இருக்க வேண்டும் நம் அதிகாரிகளுக்கு .மாணவர்களுக்கான சிறப்புக் கையேடு ..அதாவது படிப்பில் மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கான முக்கிய வினாக்கள் அடங்கிய ...மீண்டும் மீண்டும் கேட்கப்படும் வினாக்களுக்கான தொகுப்பேடு ...அதை வைத்து மாணவர்களை எந்திரத் தனமாக மதிப்பெண்களைப் பெறுவதற்குத் தயார்படுத்தும் தனியார் பள்ளிகளை மிஞ்சி விட்டது நமது கல்வித்துறை .பாவம் அது என்ன செய்யும் ...கல்வி அமைச்சர்களுக்கு கல்வி இயக்குனரும் ..உதவி இயக்குனரும் பதில் சொல்ல வேண்டும். அவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும்,மாவட்டக் கல்வி அலுவலரும் பதில் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும் . அவர்களுக்கு ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும் ..ஆனால் ஒன்று மட்டும்  இருக்கிறது...மாணவர்கள் யாருக்கும் பதில் சொல்லவும் தேவை இல்லை ... பயப்படவும் தேவை இல்லை ....
                                                                                                                          நிலை தொடரும் ...!

No comments:

Post a Comment