ஆயிஷா நடராசன் அய்யா அவர்கள் பால சாஹித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதியுள்ள விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது .கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி பண்ருட்டியில் நடைபெற்ற ஸ்வாசிகாவின் தேசிய அறிவியல் தின விழாவன்று அவருக்கு சிறந்த அறிவியல் புனை கதை வித்தகர் என்ற விருது எங்களால் வழங்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து இவர் பெரும் விருது இது . நேற்றிரவு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த போது மிக்க மகிழ்ச்சி தெரிவித்த அவர் "பரவாயில்லை முத்துக்குமரன் ...நீங்கள் முந்திக் கொண்டுவிட்டீர்கள் ...விருது வழங்குவதில்" என்று சிலாகித்ததோடு அல்லாமல் தான் எழுதியுள்ள 'நாகா 'என்ற சாரண இயக்கம் தொடர்பான ஒரு நவீன நூலை பத்து சாரணர்களுக்கு பரிசாக வழங்குவதாக மகிழ்ச்சியாக அறிவித்தார் .அவர் இயற்றிய ஆயிஷா குறு நாவலை பல பிரதிகள் வாங்கி பல ஆசிரியர்களுக்கு அளித்துள்ளது எங்கள் ஸ்வாசிகா இயக்கம்.பால சாகித்ய அகாடமி விருது பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள நம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு ஆயிஷா நடராஜன் அய்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்
No comments:
Post a Comment