Sunday 24 August 2014

புளியஞ்சோலை

திருச்சி ,துறையூருக்கு அருகில் உள்ள பிக்னிக் ஸ்பாட் புளியஞ்சோலை.

கொல்லி மலையின் அடிவாரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் 

இடம்.பாறைகள் ஊடே நடந்து இரண்டு கிலோ மீட்டருக்கும் மேல் சென்றால் 

வரும் ரம்மியமான பொய்கை ... சல சலக்கும் ஓடை ...கொல்லி மலையின் 

ஆகாய கங்கை அருவியின் மிச்ச எச்சமான  மூலிகை சுமந்து ஓடிவரும் 

சில்லென்ற தண்ணீரிலே நீராடுவது ஓர் இனிய அனுபவம். இரண்டு மூன்று 

பேராக செல்வதைவிட பத்து  பதினைந்து பேர் கொண்ட குழுவாக செல்வது 

ஆபத்துக்களை தவிர்க்கும்.ஆங்காங்கு உடைந்து கிடக்கும் உற்சாக பான 

பாட்டில்கள் நம்மை துணுக்குறச் செய்தாலும்....இயற்கை கொஞ்சும் 

மலைகளும் ,மரங்களும் ,பசுமையும்,நீரோடைகளும் சூரிய ஒளியை வாங்கிப் 

பிரதிபலிக்கும் பள பள பாறைகளும் நம்மை கிறங்கடிக்கவும் செய்கின்றன .

நீங்களும் ஒருமுறை கண்டு குளிக்கலாமே...சாரி...கண்டு களிக்கலாமே!















No comments:

Post a Comment