Thursday 21 September 2017

              144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா காவேரி புஷ்கர நிகழ்வானது இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
           
             மயிலாடுதுறையில் துலாக் கட்டத்தில்  நடைபெற்றுவரும் காவேரி புஷ்கரம்  பெரு நிகழ்வில் கலந்துகொண்டு புனித நீராடும் வாய்ப்பு அதுவும் மஹாளய அமாவாசை தினத்தில் நீராடும் வாய்ப்பு கிடைத்தது .தவறவிடாமல் சிறப்பு வரையறுக்கப் பட்ட விடுப்பு எடுத்துக் கொண்டு குடும்ப நண்பருடன் அதிகாலை கிளம்பி வழியெங்கும் உள்ள தொன்மை வாய்ந்த கலைப் பொக்கிஷங்கள் நிறைந்த ஆலயங்களை தரிசித்து பகல் 2 மணியளவில் மயிலாடுதுறையைஅடைந்தோம்.
         
               காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன.கூட்டம் அலைமோதிய நிலையிலும் குழப்பம் ஏதுமின்றி நன்முறையில் அனைத்து தீர்த்தக் கிணறுகளிலும் நீராடி காவேரி அன்னையை வணங்கியது மனதுக்கு நிறைவாக இருந்தது .
           
           வழி நெடுக நாங்கள் தரிசித்து மகிழ்ந்த ஆலயங்கள் பற்றிய பதிவு விரைவில்....!

No comments:

Post a Comment