Thursday 21 September 2017

தூய்மையே சேவை

            தூய்மையே சேவை இயக்கத்தின் மூன்றாம் நாள் சேவையாக பண்ணுருட்டி காந்தி வீதியில் உள்ள தர்கா ( பள்ளி வாசல்) வில் சாரணர்களால் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
         
           வழக்கம் போல் இன்றைய  முடிந்ததும் 4 மணியளவில் ஒன்று கூடிய சாரணர்கள் தூய்மைப் பணிக்கு வேண்டிய துப்புரவு உபகரணங்களுடன் தலைமையாசிரியர் முன்னின்று வழியனுப்ப ,பள்ளிவாசல் நோக்கி புறப்பட்டார்கள்.தர்காவின் நுழைவாயிலில் இருந்தே தூய்மைப் பணி  மேற்கொள்ளப் பட்டது.உள்ளே சென்றதும் அங்கிருந்த காகிதக் குப்பைகள்,பாலிதீன் பைகள் போன்றவற்றை அகற்றினர் .சிலர் அங்கிருந்த புதர்கள் ,தேவையற்ற களைச் செடிகள் போன்றவற்றை மண்வெட்டிகள் கொண்டு அகற்றினர்.சில சாரணர்கள் சேகரித்த குப்பைகள்,அப்புறப் படுத்தப்பட்ட தாவர மிச்சங்கள் போன்றவற்றை கூடைகளில் வாரிக்கொண்டு போய் குப்பைகள் கொட்டுமிடத்தில் கொட்டினார்கள்.சில சாரணர்கள் விதான ஒட்டடைகளை நீக்கினார்கள்.மற்றும் சில சாரணர்கள் அங்கிருந்த சிறியதும் பெரியதுமான கற்களை அப்புறப் படுத்தினார்கள்.
             
            அவர்கள் தூய்மைப் பணி ஆற்றிய தருணங்களின் காட்சிப் பதிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு .

No comments:

Post a Comment