Saturday 23 September 2017

              தூய்மையே சேவை  திட்டத்தின் 5 ஆம் நாளான
( நிறைவு நாளான )இன்று காலை 10 மணியளவில் சாரணர்கள் தலைமை ஆசிரியர்  பிற ஆசிரியர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்க ,மாணவர்கள் நடை  பயணமாக திருவதிகை வீரட்டானத்து இறைவன் ஆலயம்  கிளம்பினர்.
          சுமார் 4 கி .மீ தொலைவுள்ள இடத்தை நடந்தே கடந்து ஆலயம் சென்ற சாரணர்கள் இறைவனை முதலில் தரிசித்து ,பின்னர் தூய்மைப் பணிகளைத் தொடங்கினர் .மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்ட சாரணர்கள் ஒட்டடை நீக்குதல்,குளக்கரை தூய்மை,நூறு கால் மண்டபத் தூய்மை.புற்களை நீக்குதல் உள்ளிட்ட சேவைகளை புரிந்தார்கள் .
            மதிய உணவு கோவிலில் வழங்கப் பட்டது.உணவுக்குப் பின் மீண்டும் சேவைகள் துவங்கின .நட்சத்திர மரங்கள்,திசைத் தாவரங்கள் ,நவகிரகத் தாவரங்கள் இவற்றுக்கிடையே வளர்ந்திருக்கும் தேவையற்ற புற்கள் .களைச்செடிகளாகியவற்றை மண் வெட்டி கொண்டு அகற்றினர்.புற்கள் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு உணவாக்கப் பட்டன.
            உணவு இடைவேளையின்போது கோவிலின் தல வரலாறு ,திருநாவுக்கரசரின் வாழ்க்கைக்கு கதை ஆகியன கூறப்பட்டது.கோவில் தூண்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பு குறித்தும் கூறப் பட்டது.
            நிகழ்வுகள் நிறைவடைந்ததும் மாணவர்கள் அனைவருக்கும் பிரசாதம்,சுவாமி படம் வழங்கப் பட்டது.இந்நிகழ்வு சாரணர்களைப் பொறுத்தவரை சேவை முகாமாக மட்டுமன்றி வரலாற்று சுற்றுலாக் களப்  பயணமாகவும் இருந்திருக்கும்.
           மேலும் தங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குண்டான மரங்கள் பற்றியும் படித்து அறிந்து வியந்தபடி என்னிடம் பகிர்ந்துகொண்டனர் .ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்....!
            இதுதான் சாரணியம் ...இதுதான்  களப்பயணம் ...இதுதான் உண்மையான கல்வி ....!சாரணியம் தரும் கற்றல் அனுபவத்தை -வாய்ப்பை -வாழ்க்கைக்கு கல்வியை வகுப்பறை தந்துவிடுமா என்ன ? மாணவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை ...எனக்கும்தான் என்பதைக் கூறவேண்டுமா என்ன?

No comments:

Post a Comment