Monday 18 September 2017

இன்று பிற்பகல் ஒரு  தொலை பேசி தகவல் .சாரண செயலர் அவர்களிடம் இருந்து ...இன்று முதல் வரும் அக்டோபர் -2 வரை ஸ்வச் பாரத் இந்தியா திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சில பள்ளிகளை தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளின் சாரண இயக்க மாணவர்களைக் கொண்டு அப்பகுதியில் உள்ள முக்கியமான இடங்களை தூய்மை செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் இருந்து சுற்றறிக்கை அனுப்பப் பட்டு உள்ளதாகவும் ,பணிகளை இன்று முதலே  கேட்டுக் கொண்டார்.தேர்வுநேரமாக இருப்பினும்கூட ,தேர்வுகள் முடிந்ததும் தினமும் அரை மணி நேரமாவது தூய்மைப் பணியில் சாரணர்களை ஈடுபடுத்தி திட்டத்தின் நோக்கம் ஈடேறுவற்கு ஒத்துழைக்கக் கேட்டுக்கொண்டார்.அதன்படி இன்று  மாலை தேர்வு முடிந்ததும் சாரண மாணவர்களை ஒருங்கிணைத்து தலைமை ஆசிரியரின் தலைமையில் நிகழ்வு துவக்கி வைக்கப் பட்டது.இன்று தற்செயலாக பண்ணுருட்டி நகர மன்ற துப்புரவுப் பணியாளர்களும் பள்ளியின் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.அவர்களுடன் நமது சாரணர்களும் இணைந்து பள்ளியை சுத்தம் செய்தனர்.இன்றிலிருந்து தினமும் தூய்மைப் பணி  மேற்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்  பட்டது .கடை வீதி ,திருவதிகை சிவன் கோவில்,பூங்கா உள்ளிட்ட இடங்கள் தூய்மை செய்வதற்கான பகுதிகளாக அறிவிக்கப் பட்டன. ஆனால் பள்ளி வளாகத் தூய்மை அல்லது சுற்றுப் புறத் தூய்மை என்பது ஏதோ சாரண அல்லது நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை கொண்டு செய்யவேண்டிய பணி அல்ல .அவ்வாறு தூய்மை செய்த பிறகு அதை தொடர்ந்து பராமரித்து வருவதுடன் அந்த இடங்களில் கண்ட குப்பைகளை வீசி மீண்டும் அந்த இடத்தை அசுத்தமாக்கிப் பார்க்கும் மனிதர்கள் உள்ளவரை தூய்மை பாரத் திட்டம் தோல்வியில்தான் முடியும்.இதுபோல் பள்ளி வளாகத்தை தூய்மை செய்துவிட்டு வந்தால் வகுப்பறை சாளரங்கள் வழியே காகிதங்களை கசக்கி எரிந்தும் ,மதிய உணவுவேளையின்போது உணவு உண்ட மிச்சங்களை,பாலிதீன் பார்சல் காகிதங்களை எரியும் மாணவர்களின் கலாச்சாரத்தை என்னவென்பது?இறைவணக்கக் கூட்டங்களிலும் இதுகுறித்துக் கூறினாலோ அல்லது தனித்தனி மாணவர்களிடம் நயந்து கூறினாலோ கூட செவிடன் காதில் ஊதிய சங்காய் பயனற்றுப் போவதுதான் நிதர்சனம்.இது ஏதோ எங்கள் பள்ளியில் மட்டுமல்ல ...அநேகமாக இந்தியாவின் எல்லா பள்ளிகளிலும் இதுதான் நிலைமை.எல்லா பொது ஜனங்களிடமும் இதே மனப்பான்மையைப் பார்க்கலாம்.அவர்கள் கடன் குப்பை போட்டுக் கிடப்பதே...!அவர்களின் குப்பை இருப்பினும் தன்னார்வத் தொண்டர்கள் சோர்ந்துபோவதில்லை .அவர்கள் கடன் தூய்மை செய்து கிடப்பதே.....!ஊதுற சங்கை ஊதி வைப்போம் ...விடியும்போது விடியட்டும் ...!எல்லாமே ஒரு சடங்காய் அல்லவா போய் கொண்டு இருக்கிறது?

No comments:

Post a Comment