Thursday 14 September 2017

       அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்  கீழ் நடத்தப் படும் தேசிய அளவிலான கலைவிழா கலா உத்சவ் என்ற பெயரில் கடந்த மூன்று வருடங்களாக பிரம்மாண்டமாக கொண்டாடப் பட்டு ,வெற்றிபெறும் மாணவர்களின் குழுவிற்கு பெருந்தொகையும்  பரிசாக வழங்கப் பட்டுவருகின்றது.பள்ளி அளவில் ,மண்டல அளவில்,கல்விமாவட்ட அளவில் ,மாவட்ட அளவில் ,மாநில அளவில் என பல நிலைகளில் போட்டிகள் நடத்தப பட்டு சிறந்த மாணவர்களை தேசிய அளவில் கலந்துகொள்ளச் செய்கின்றார்கள்.நடனம், இசை,நாடகம், காண் கலை என நான்கு போட்டிகள் .அனைத்துமே குழுப் போட்டிகள்தாம்.இவ்வருடம் மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவராக என்னை நியமித்து உள்ளார்கள்.போட்டிகள் காலாண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்ற சூழலில் அதிகாரிகள் ஆர்வம் காட்டினாலும்.பள்ளி அளவிலோ ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அளவிலோ மட்டும் அல்லாது  பெற்றோர்களும் கூட ஆர்வம்காட்டாதது பெரும் குறை.இருப்பினும் ஆர்வம் கொண்ட சில பள்ளிகள் ,ஆர்வம் கொண்ட சில மாணவர்களின் பங்களிப்பால் கடலூர் கல்வி மாவட்ட அளவில் மற்றும் விருத்தாசலம் கல்விமாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன .கடலூர் கல்வி மாவட்ட அளவில் 13-09-2017 அன்று கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் ,விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் 14-09-2017 அன்று விருதை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றன. ,15-09-2017 இ ன்று- மீண்டும் கடலூர் மாவட்ட அளவிலான போட்டிகள் --மாநில  அளவில் பங்கேற்கும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டிகள்-- முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  நடைபெற்றன .மாவட்ட  அளவில் நடைபெற்ற போட்டிகளின் சில காட்சிகள் ...இதோ உங்கள் பார்வைக்கு...!.

வெற்றி பெற்ற அணிகள் :

நடனம்: சி.கே.மெட்ரிக் பள்ளி,கடலூர் .

இசை    :சி.கே.மெட்ரிக் பள்ளி ,கடலூர் .

நாடகம்: அரசு உயர்நிலைப் பள்ளி ,கருக்கை .

காண் கலை :  திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி,பண்ருட்டி .
                               அரசு மேல்நிலைப் பள்ளி,பண்ருட்டி ,
                               சி.கே.மெட்ரிக் பள்ளி ,கடலூர் இவைகளின் ஒருங்கிணைந்த                                    குழு.

No comments:

Post a Comment