Saturday 20 January 2018

வாட்ஸ் ஆப்பில் ஆனந்தன் குட்டைய்யன் என்பவரின் பகிர்வு


20-01-2018 அன்று வாட்ஸ் ஆப்பில் ஆனந்தன் குட்டைய்யன் என்பவரின் பகிர்வு  

எண்  =9840181202


ஆண்டாளை அசைத்தால் - ஆரியம் அசையும்


--------------------------------------------
தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்களாலும், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் மற்றும் திராவிட இயக்கத்தவர்களாலும் விமர்சனங்கள், விவாதங்களாலும், தத்துவார்த விளக்கங்களாலும், பல்வேறு போராட்டங்களாலும் இந்துமத கடவுள்களை அம்பலப்படுத்தி கிழித்தெறிந்த போது நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு சும்மாயிருந்த பார்ப்பனர்களையும்,
மடிசார்மாமிகளையும்
வீதிக்கு வரவழைத்த மர்மம்தான் என்ன?
தோழர்களே!அலசுவோமா?
குறிப்பாக தமிழ் மண்ணில் நீண்ட நெடுங்காலமாகவே பார்ப்பனர்களுக்குள் உள்ள இரு பெரும் பிரிவுகளான
வைணவ பார்ப்பனர்களுக்கும்,
சைவ பார்ப்பனர்களுக்கும் யார் ஆச்சார ஆளுமை நிறைந்தோர் என சச்சரவு நிலவுதாக தவறான கருத்துக்களை உருவாக்கி வருகின்றனர்.
தசாவதாரம் எனும் திரைப்படத்தில் கமல்ஹாசன் எனும் பார்ப்பனரும் இதையே காட்டி நம்மை முட்டாளாக்க முனைந்திருப்பார்.
மாறாக
இருபெரும் பார்ப்பனப் பிரிவுகளுக்குள்ளான போட்டி உண்டு!
அஃது என்னவெனில் 97 விழுக்காடு சூத்திர மக்களை அடிமைகளாகவும், ஆளுமை செலுத்தவும் தகுதியுள்ள வலிமை மிக்க சக்தியாக யார் வருவது என்பதே சைவ,வைணவ பார்ப்பனர்களுக்குள் உள்ள உண்மையான போட்டியாகும்.!
இப்போட்டியில் சைவர்களைவிடவும் வைணவ பார்ப்பனர்கள் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.!
தமிழர்களிடம் பக்தியின் குறியீடாக திருப்பாவையையும், வைணவர்களின் ஒன்றுபட்ட வலிமையை குறிக்கும் விதமாக "ஆண்டாளையும்" முன்னெடுத்து வெற்றியும் கண்டனர்.
இவர்களின் வளர்ச்சி பல்வேறு காலகட்டத்தில் சூத்திர மக்கள் யாரும் அறியா வண்ணம் மெல்ல, மெல்ல வளர்ச்சி அடைந்தது.
1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்தபோது அன்றைக்கு அதிகார ஆளுமையில் கோலோச்சிய வைணவ பார்ப்பனர்களின் சதியால் தமிழக அரசின் முகப்பு அடையாளமாக திருவில்லிபுத்தூர் கோயில் (ஆண்டாள் திருத்தலம்)தான் சின்னமாக அமைத்துக் கொண்டு உலக அளவில் தங்களின் ஆளுமையை இன்றுவரை பறைசாற்றி தமிழகமே ஆண்டாளின் அதாவது வைணவ பார்ப்பனர்களின் குறியீடாக மாற்ற பல நூற்றாண்டுகால சதி நடத்தே வந்துள்ளது.
மதச்சார்பற்ற நாட்டில் மதரீதியான இடங்களை, முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி 2013இல் தொடுத்த பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை நினைவுபடுத்துகிறோம்
தமிழ் இலக்கியங்களையும், மக்களையும், பண்பாட்டையும் இழிவுபடுத்துகிற ஆண்டாளின் ஆலயத்தை தமிழக அரசின் அரசுசின்னத்திலிருந்து தூக்கியெறிந்து அய்யன் திருவள்ளுவரை தமிழ்மண்ணின்
தமிழக அரசின்
அரசு சின்னமாக குறியீடாக்குவோம்.
வாய்மையே வெல்லும் என்கிற போதனைகள் வேண்டாம்
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எனும் முழக்கத்தை தமிழக சின்னத்தில் பொருத்துவோம்!
புத்த சமண மதங்களை எதிர்ப்பதில் அழிப்பதில் மட்டுமல்ல; சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், காணாபத்யம் போன்ற 6 மதப்பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதிலும் படுகொலை செய்து கொள்வதிலும் கூட மூர்க்கமாகவே இருந்தனர். (’இந்து’ என்றொரு மதமே அன்று இருந்ததில்லை) வருணாசிரம தருமம் தான் இந்து மதம் என்று பின்னர் அழைக்கப்பட்டது.
ஆனால் வழிபாட்டு முறைகளின் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் பல்வேறு மதங்கள் இந்தியாவில் நிலவின. ஆனால் இன்றோ வர்ணாசிரம, மனுநீதி அடிப்படையிலான ஆட்சியின் கீழ் உழைக்கும் மக்களை சூத்திர அடிமைகளாய் உருவாக்கிட இந்துத்வா எனும் ஓர் குடையின் கீழ் சைவர்களையும் இணைத்து தங்களின் ஆளுமையை ஆண்டாளின் மூலம் நிறுவ முயன்ற இராமானுஜரின் வாரிசுகளுக்கு தமிழகமும், பெரியாரியலும் இடியாய் இறங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்..
ஆம், தடித்துப்போன தோல்களாய் உனக்கு அடிமைச் சேவகம் செய்த எங்களை தட்டியெழுப்பியவன் தந்தை பெரியார்.
கழுமரத்தின் கூர்மையில் எம் பாட்டனின்,பூட்டனின் தசைகள் கிழிந்த வலியை எமக்கு உணரவைத்தவர் அய்யா சுப.வீ.
எம் முன்னோர் சுமந்த ஆரிய இழிவுகளை கழிவுகளாய் ஆரியத்தின் தலைமேல் வைத்து தத்துவ கழுவேற்றுவோம்!
இந்நிலையில் ஆண்டாளின் மீதான விமர்சனங்களின் ஊடே’ சத்தியமூர்த்தி அய்யரின் வாரிசுதாரர்களான தினமணி வைத்தியநாதய்யர்களின் அனுக்ரகத்தில் பெருமை தேடவும், சைவ பார்ப்பனர்களை உயர்த்திப் பிடிக்க தினமனி நடத்திய ஆரிய ஊடலில் தானாய் சென்று பலியான ஆடுதான் வைரமுத்து.
ஆண்டாள் குறித்த திராவிட இயக்கங்களின் விமர்சனங்களும், விவாதங்களும், ஆபாச மூடத்தனங்களை அம்பலப்படுத்திய நிலையையும் கண்டு அதிர்ந்து போன வைணவமும், பார்ப்பனீயமும் தங்களின் பல நூற்றாண்டுகால சதி நீர்த்துப் போய்விடுகிறதே எனத் துடிக்கிறது.
ஆம் தோழர்களே!
ஆபாச குப்பைகளை திருமறையாய், வேதமாய், பாசுரமாய் பாடச் சொன்ன ஆழ்வார்களின் கேவலங்களை இன்று அம்பலத்தில் ஏற்றுவோம்!
தேவாரத்தில் திருஞானசம்பந்தன் "மயிர் பறிக்கும் கோப்பாளிகள்
சமணக் குண்டிகள்
அமண பௌத்தப் பிண்டிப் பீதரம்
சமணப் பெண்டிரைக் கற்பழிக்கத் திருவுளமே' என்றதுவும்,
பெரிய புராணத்தில் சேக்கிழாரோ..
" பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சி குழிவாய் அதனில் குறியை நட்டு" எனக் கூத்தடிப்பதும்,
அதே புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனாரோ..
தாசி சங்கிலி நாச்சியாரைக் கண்டபோது பெண்ணுறுப்பில் காமப்பெருக்கால் நீர் ஒழுகுவதாக கூறுவதும் "மணிசிளர் காஞ்சி வனப்புடை அல்குல் ஒழுகு நீர்த்துறை"என அருவறுப்பாய் குழைவதும்,
"பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் கொங்கை கிளர்ந்து
குமைத்து குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்ய
என் அகத்து இளங் கொங்கை
விரும்பித்தம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்க்கு
என்புரிவுடமை செய்யுமினோ " என காமக்கதை பேசி சமூக ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் திருப்பாவை ஆண்டாளையும் தமிழ் மண்ணிலிருந்து தூக்கியெறிவோம்!
இன்று ஆண்டாளை புறக்கணிக்கும் தமிழகம், நாளை ஆண்டாளின் கோவிலை தமிழக அரசின் சின்னமாய் ஏற்பதையும் இழிவாக எண்ணி தூக்கி எறியும்.
மார்கழி குளிரின் நெருப்பில் திருப்பாவையும், திருவெம்பாவையும் சாம்பலாகும்.
பார்ப்பன தாஸ்யபாஸூர கூத்துக்கள் அடியோடு நாசமாகும்!
சூடிக் கொடுத்தாள் என பெருமைகூறி
கூடி கெடுக்கும் பார்ப்பனீயம் இனி தானாய் கெடும்!
உண்மையில்
அப்படிப்பட்ட மார்கழி புரட்சி வந்தே தீரும்.
ஆண்டாள் தமிழர்க்கு வேண்டாள்;
இப்போது புரிகிறதா?
ஆண்டாளை அசைத்தால் ஆரியம் அசையும்!
(நன்றி)
- மு.தமிழ் மறவன்.
🔴

No comments:

Post a Comment