ஞாநி ....!
ஞாநி சங்கரன் எனும் பெயர் கொண்ட இவர்
தான் பிறந்த அதே ஜனவரி மாதத்திலே இவ்வுலகைத் துறந்தும் இருக்கிறார்
தனது 64 ஆம் அகவையில் ...!
ஓ பக்கங்கள் துவங்கி அறிந்தும் அறியாமலும் என நீண்டு செல்லும் இவரது படைப்புகள் ஒவ்வொரு வாசகனுக்கும் வழுக்குப் பாறை நிலத்தில் ஊன்றுகோல் போல் என்றும் திகழ்வன .
எந்த ஒரு விஷயத்தையம் நாம் பார்க்கும் பார்வை வேறு
அவர் பார்த்த பார்வை வேறு
நாம் அணுகும் கோணம் வேறு
அவர் அணுகுகிய கோணம் வேறு
யார் பற்றியும் பயப்படாமல்
எதற்கும் தயங்காமல் தான் நினைத்த கருத்துக்களை
வெளிப்படையாகவும் தயக்கமின்றியும் கூறி
கொட்டு ,ஷொட்டு ,பூச்செண்டுகளை
தவறாமல் வழங்கிய சமூக விமரிசகன் .
குமுதத்தில் தொடங்கிய இவரது ஓ பக்கங்கள் கட்டுரைத் தொடர்
சில காரணங்களால் தடம் மாறி விகடனுக்கு இடம் பெயர்ந்தது
கால முரண் அல்லது காலத்தின் கோலம் ...!
படைப்பாளி ,கல்வியாளர் ,எழுத்தாளர் ,இயக்குனர் ,
பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர் .
தேர்தல் முறையிலே 49-ஓ கொண்டுவந்ததன்
பெரும்பங்கு இவரையே சாரும் .இவரது மறைவு எம் போன்ற வாசகர்களுக்கும் ,எழுத்துத் துறைக்கும் பேரிழப்பு !
அவரின் விரிந்து பரந்த கனவுகள் நிறைவேறும் வரையிலும்
நாம் செலுத்தும் இதுபோன்ற அஞ்சலிகள்
மணமில்லா வெறும் காகிதப் பூக்கள் கொண்டு செலுத்துபவை மட்டுமே !
வெல்லட்டும் அவர் சிந்தனைகள் !
ஆழ்ந்த இரங்கல்கள் !
ஞாநி சங்கரன் எனும் பெயர் கொண்ட இவர்
தான் பிறந்த அதே ஜனவரி மாதத்திலே இவ்வுலகைத் துறந்தும் இருக்கிறார்
தனது 64 ஆம் அகவையில் ...!
ஓ பக்கங்கள் துவங்கி அறிந்தும் அறியாமலும் என நீண்டு செல்லும் இவரது படைப்புகள் ஒவ்வொரு வாசகனுக்கும் வழுக்குப் பாறை நிலத்தில் ஊன்றுகோல் போல் என்றும் திகழ்வன .
எந்த ஒரு விஷயத்தையம் நாம் பார்க்கும் பார்வை வேறு
அவர் பார்த்த பார்வை வேறு
நாம் அணுகும் கோணம் வேறு
அவர் அணுகுகிய கோணம் வேறு
யார் பற்றியும் பயப்படாமல்
எதற்கும் தயங்காமல் தான் நினைத்த கருத்துக்களை
வெளிப்படையாகவும் தயக்கமின்றியும் கூறி
கொட்டு ,ஷொட்டு ,பூச்செண்டுகளை
தவறாமல் வழங்கிய சமூக விமரிசகன் .
குமுதத்தில் தொடங்கிய இவரது ஓ பக்கங்கள் கட்டுரைத் தொடர்
சில காரணங்களால் தடம் மாறி விகடனுக்கு இடம் பெயர்ந்தது
கால முரண் அல்லது காலத்தின் கோலம் ...!
படைப்பாளி ,கல்வியாளர் ,எழுத்தாளர் ,இயக்குனர் ,
பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர் .
தேர்தல் முறையிலே 49-ஓ கொண்டுவந்ததன்
பெரும்பங்கு இவரையே சாரும் .இவரது மறைவு எம் போன்ற வாசகர்களுக்கும் ,எழுத்துத் துறைக்கும் பேரிழப்பு !
அவரின் விரிந்து பரந்த கனவுகள் நிறைவேறும் வரையிலும்
நாம் செலுத்தும் இதுபோன்ற அஞ்சலிகள்
மணமில்லா வெறும் காகிதப் பூக்கள் கொண்டு செலுத்துபவை மட்டுமே !
வெல்லட்டும் அவர் சிந்தனைகள் !
ஆழ்ந்த இரங்கல்கள் !
No comments:
Post a Comment