Monday 29 January 2018

வந்தே மாதரம்...!

அனைவருக்கும் இனிய குடியரசு நாள் வாழ்த்துகள்...
வந்தே மாதரம்...!
தாய் மண்ணே வணக்கம்...!
எனக்கு நினைவு தெரிந்து இந்த குடியரசு நாள் விழாதான் நான் பங்கேற்காத நிகழ்வாக இருக்கும்.என் பள்ளி நாள் தொடங்கி ..படித்த பள்ளியிலோ ...நான் நடத்தி வந்த பள்ளியிலோ...தனிப்பயிற்சி மையத்திலோ ...நான் பணியாற்றி வருகின்ற பள்ளியிலோ .. ஒரு வருடம் தவறாது பங்கேற்று விடுவேன்..எனத சாரணச் சீருடையுடன் பள்ளி மாணவர்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் 15 வருடங்களாக கொடியினை வழங்கி வருகிறேன்...ஏன் ...என் இல்லத்திலும்கூட தேசியக்கொடியினை காலை 6.30 மணிக்குள் ஏற்றி நான் வசிக்கும் தெருவில் உள்ளோருக்கு
கொடிகளும் இனிப்புகளும் வழங்கிவிடுவேன்...இம்முறையோ நகரும் தொடர் வண்டியில் நான்...எனது சட்டையில் கொடி கூட அணியாமல் நான்...அனேகமாக பகல் 12 மணியாகிவிடும் ...நான் வீடு சேர ...
எனது மனதிற்கினிய எப்போதும் சாரணர்களுடன் தேசிய விழாவைக் கொண்டாடி மகிழும் நான் ...
இன்று வெறுமையான மனதுடன்...
தொடர் வண்டியின் சாளரத்தின் வழி நகர்கின்ற
காட்சிகளை வெறித்தபடி...

No comments:

Post a Comment