Wednesday 16 May 2018

எங்கள் ஸ்வாசிகா இயக்கம் வருடந்தோறும் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை வயது பேதம் பாராது அங்கீகரித்து சிறப்பு செய்து வருகின்றது .அவ்வகையில் இந்த ஆண்டு இரண்டு சிறார்களுக்கும் ,வயதில் மூத்த கலைஞர்களுக்கும் விருது வழங்கிப் பெருமைப் படுத்தி அதில் தானும் பெருமை கண்டுள்ளது .

முதலில் செல்வன் . தியாக்ஷ்வா

சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் .
தந்தை சுரேஷ் குமார் .
தாயார் காயத்ரி. இவர் பண்ணுருட்டியை அடுத்த
புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் .
தியாக்ஷ்வாவுக்கு ஓவியக் கலைக்காக 
சித்திரக்கலை வளர் சுடர் விருது வழங்கப்பட்டுள்ளது.
செய்த சாதனைகள் இதுவரையிலும் 176க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளான்.
ஓவியக்கலையில் பல முறை உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளான் .

தின மலர் சிறுவர் மலரில் இவனைப் பற்றிய
கவர் ஸ்டோரி 2 பக்கத்திற்கு வெளியிட்டு கௌரவப் படுத்தியுள்ளது .
ஜெர்மனி ,லண்டன்,ஜப்பான் என உலகநாடுகளுக்கெல்லாம்
பறந்து பறந்து படங்கள் வரைந்து பாராட்டுகளும்
பரிசுகளும் பெற்று தொடர்ந்து தன்னை ஓவியக்  கலையில் சாதனை படைக்கத்  தூண்டும் பெற்றோர்க்கு பெருமை சேர்த்து வருகிறான் .

அவனுக்கு சித்திரக்கலை வளர் சுடர் என்னும் பெருமைமிகு விருதினை வழங்கி அவர் மேலும் பல சாதனைகளை இத்துறையில் புரிய வாழ்த்தி மகிழ்கிறோம் ... இச் சாதனையாளனை நீங்களும் வாழ்த்தலாம் ...

( சதா ஏதாவது கிறுக்கித் தள்ளும் குழந்தைகளின் தலையில் தட்டி படிப்பைப் பாரு ..மார்க்கு வாங்கு எனும் பெற்றோர்களே ...கவனம் தேவை ... அந்தக் கிறுக்கலின் பின்னே  தியாக்ஷ்வா போன்ற ஒரு இளம் சாதனையாளன் ஒளிந்துள்ளான் )

No comments:

Post a Comment