Wednesday 27 March 2019

ஆளுநர் விருது பெற்ற சாரணர்களுக்கு பாராட்டு விழா

                ஆளுநர் விருது பெற்ற சாரணர்களுக்கு பாராட்டு விழா


       26 -03-2019 , செவ்வாய்க்கிழமை அன்று பண்ணுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆளுநர் விருது பெற்ற சாரணர்களுக்கு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் பாராட்டு விழா நடைபெற்றது .பண்ணுருட்டி  மேல்நிலைப் பள்ளியில் காந்திஜி  சாரணர் படை சிறப்பாக செயல்பட்டு
வருகிறது .இப்பள்ளியின் சாரணர்கள் நான்குபேர் இக்கல்வியாண்டின் துவக்கத்தில் சென்னை ராஜபவனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களது கரங்களால் ராஜ்யபுரஸ்கார் விருதை 14-06-2018 அன்று பெற்று வந்தனர் .அதற்கான பாராட்டு விழாவை பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு பூவராகமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார் .அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவரும் சக்தி ஐ டீ ஐ தாளாளருமான  உயர்திரு R .சந்திரசேகர் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கினார் .பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொருளர் உயர்திரு சக்திவேல் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார் .பண்னருட்டியின் பிரமுகரும் கல்வி வள்ளலுமான K N C .P . மோகனகிருஷ்ணன் அவர்கள் காந்தி அண்ணல் சிலைக்கு மாலை அணிவித்து தொடர்ந்து சாரணர் செலயல்பாடுகள் பற்றிய விளக்க புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தார் .பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத்தலைவரும் ஜோதி கலர் லேப் உரிமையாளருமான உயர்திரு கோ .காமராஜ் அவர்கள் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தார் .அரசு மகளிர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொருளர் உயர்திரு .C .வானவில் ராஜேந்திரன் அவர்கள் விவேகானந்தர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.பள்ளியின் N S S அலுவலர்
உயர்திரு S .மோகன்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் .கடலூர் மாவட்டத்தின் சாரணச்  செயலர் உயர்திரு ஜே .செல்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு சாரண இயக்கத்தின் புதிய பெயர் பலகையை திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார் .தொடர்ந்து சாரணர்களுக்கு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் சால்வை போர்த்தி மெடல் அணிவித்து சான்றிதழ்களையும் பாராட்டுக் கேடயங்களையும் வழங்கி கௌரவித்தனர் உடன் அந்த மாணவர்களின் பெற்றோரும் மேடைக்கு வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் தனி நபர் ஓவியக் கண்காட்சி மற்றும் ஒளிப் படக்கண்காட்சி அமைத்திருந்த சாதனை மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன .பின்னர் விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் ,சாரணியர் பிரிவு மாவட்ட அமைப்பு ஆணையர் திருமதி உஷாராணி அவர்கள் ,ஒய்வு பெற்ற  N C C அலுவலர் உயர்திரு ஜே. பாலச்சந்தர் அவர்கள்.துணை தலைமை ஆசிரியர்கள் திருமதி அமலி ,திருமதி ஹேமலதா அவர்கள்,பள்ளியின் ஆசிரியர் சங்க செயலர் உயர்திரு .லட்சுமி காந்தன் ,  பள்ளியின் முதுகலை தாவரவியல் ஆசிரியர் உயர்திரு எபனேசர் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர் உயர்திரு .மரிய ஆண்டனி அவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர் .பட்டதாரி ஆசிரியர் திருமதி பிரேமலதா மற்றும் N C C அலுவலர் .கவிஞர் ராஜா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர் .சாரண ஆசிரியரும் கடலூர் மாவட்டத்தின் சாரணர் பிரிவு அமைப்பு ஆணையருமான உயர்திரு A .முத்துக்குமரன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார் .பட்டதாரி ஆசிரியர் உயர்திரு ரத்தினப்பிரகாஷ் அவர்களும் சாரணப் படைத்தலைவன் செல்வன் ஹரிநாத்தும் இணைந்து மேடை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார் .விழா ஏற்பாடுகளை இப்பள்ளியின் சாரண ஆசிரியர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் .கடலூர் மாவட்டத்திலேயே சாரண அமைப்பு மிகவும் சிறப்பாகவும் உயிர்ப்புடனும் செயல்படும் பண்ணுருட்டி அரசுப்பள்ளியை விழாவிற்கு வந்திருந்த மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் .பாராட்டினர்.
























No comments:

Post a Comment