Wednesday 27 March 2019

உள்ளம் தொடும் ஒரு கவிதை

உள்ளம் தொடும் ஒரு கவிதை
ஒரு போர் மறவனின் தொனியாக...
யுத்தபூமியில் நான் ஒருவேளை 
மரிக்கக் கூடும்.
அப்பொழுது என் சடலத்தை
எனதில்லத்திற்கு அனுப்பி வையுங்கள்...
நான் இதுவரை வென்றெடுத்த பதக்கங்களை
என் நெஞ்சு சுமக்க என்சீருடையில் அணிவியுங்கள்...
என் தாய் மண்ணிற்கான என் கடமையைச் செய்தேன் என என்னை தன்மணி வயிற்றில் பத்து மாதம் சுமந்தெடுத்த
என் ப்ரிய அன்னையிடம் சொல்லுங்கள்...
என் தந்தையின் தலை எப்போதும் கர்வத்துடன் நிமிர்ந்தேயிருக்கட்டும்... என்னால் எப்பொழுதும் அவருக்குப் பெருமை மட்டுமே மிச்சம் என நவின்றிடுங்கள்...
என் சகோதரனை நன்கு படிக்கச் சொன்னதாகச் சொல்லுங்கள்...
எனது இருசக்கர வாகனம் இனி அவனது உடைமையென்றும் உரைத்திடுங்கள்...
ஆதவனின் அஸ்தமனத்துக்குப் பின்னர்
மீளாஉறக்கத்தில் ஓய்வெடுக்கச் சென்றதாக
எனது தங்கையிடம் தெரிவித்து அவளை கவலை கொள்ளாதிருக்கச் சொல்லுங்கள்...
அப்படியே என் அன்னை பூமியிடத்தும்
அழவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளுங்கள்..
ஏனெனில் நான் இறப்பதற்கென்றே
பிறப்பெடுத்திட்ட ஒரு போர்வீரன்.
எல்லையில் நின்று எந்நேரமும்
தாய் மண் காக்க
வீர மரணத்தை ஒரு பதக்கமாக அணிய
தன் நெஞ்சை நிமிர்த்திக் காத்திருக்கும்
ஓர் இந்திய வீரனின்
ஆழ் மனக்குரல் இங்கே கவிதையாக...

No comments:

Post a Comment