Wednesday 27 March 2019

*அறுபடப்போகும் ஆடுகளுக்கான கடைசித் தீனி!*


 *அறுபடப்போகும் ஆடுகளுக்கான கடைசித் தீனி!*
*தேர்தல் நெருங்குகிறது; வெற்று கூச்சல்கள் விண்ணைத் தொடுகிறது. பழையத் தேர்தல் அறிக்கைகளின் தேதிகள் மாற்றப்பட்டு, அச்சு மாறாமல் வெளியிடப்படும். திமுக 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி' என்பதும், அதிமுக 'கச்சத்தீவை மீட்போம்' என்பதும், காங்கிரஸ் 'கல்விக் கடன் ரத்து' என்பதும் பாஜக 'இராமர் கோயில் கட்டுவோம்' என்பதும் பழைய பஞ்சாங்கம் தான் என்றாலும் புதிய அட்டைகளோடு வெளியிடப்படும்*.

*ஒரே மாதிரியான அறிக்கையை வார்த்தைகளில் சில மாற்றம் செய்து எல்லாக் கட்சிகளும் வெளியிடும். ஆனால் மக்களுக்கோ இறுதியில் மிஞ்சப்போவது ஏமாற்றம் மட்டுமே.😩😩😩😩😩😩😩இவர்கள் ஏமாறுவதுகூட சிக்கல் இல்லை, நாம் ஏமாந்துவிட்டோம் என்பதனை உணரும்🤮🤮🤮🤮🤮🤮அறிவுகூட இங்கு யாருக்குமே இல்லை என்பதுதான் பெரும் சோகம்.*
*தேர்தல் அறிக்கைகளில் இலவசப் பொருள்களைத் தருவோமென அறிவிப்பு தந்த காலம் மலையேறிப் போய்விட்டது.🍾🍾🍻💰💷💶💴 இப்பொழுது நிலத்திற்கு 6000..60000 ரூபாய் என்று npej ஏழைக் குடும்பத்திற்கு 2000 ...20000ரூபாய் என்று febqqbej
அறிவிப்பது என்பது மோசடியின் உச்சம். இவையெல்லாம் சமூக நலத் திட்டத்தில் வருமென வாய்கிழியப் பேச ஒரு பகுத்தறிவு பக்கோடா கூட்டம் இந்நேரம் கிளம்பி இருக்கும்.*
*இலவசங்கள் மக்களை மந்தைகளாக🐮🐷🐄🐄🦙🦙🐑🐐மாற்றுகிறது என்று நாம் சொன்னோம். அதற்கு திராவிட அறிவு ஜீவிகள், ஏழைகளும் பொருளாதாரச் சமநிலையை எட்டுவதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுவதாக கத்தினார்கள். இன்று பொருள்களுக்கு பதில் பணமே நேரடியாக வழங்குவதென அரசுகள் முடிவு செய்துவிட்டன.* 🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
*பல கோடியில் ஒரு திட்டத்தை தீட்டி, அதில் கமிசன் பேரம் பேசி, தன்னோட டீலுக்கு யார் சம்மதிக்கின்றனரோ, அவர்களுக்கு டென்டர் வழங்கி, கமிசனைக் கணக்கச்சிதமாக வாங்கி, அந்தப் பணத்தையே வார்டு வார்டாக பிரித்துக் கொடுத்து, சட்டத்திட்டங்களுக்கு முரணாக வாக்கை விலைக் கொடுத்து வாங்கிய க.....தி, பு...... வி காலத்து அரசியல் இன்று இல்லை. நேரடியாக அரசு கருவூலத்தில் இருந்தே, சட்டத் திட்டங்களின் படியே, வாக்கிற்கு பணத்தைக் கொடுக்கும் பலே கில்லாடிகளான .எ _____மி,
தா===== மோ போன்றோர்களின் காலம் இது என்பது எப்பேற்பட்ட சமூகநல வளர்ச்சி (?) என்பதை அனைவரும் உணருங்கள்.*
*வாங்கியே பழகிய அடிமை மக்களுக்கு இந்த இலவசங்களுக்கு பின்னால் உள்ள அரசியல் ஒருபோதும் புரியப் போவதில்லை. பொருள்களை இலவசமாகக் கொடுத்தக் காலத்திலேயே, 'எனக்கு வேலை கொடு.. நானே உழைத்து எனக்கானப் பொருளை ஈட்டிக் கொள்கிறேன்'🤩🧐🧐🧐🧐🥶🥶🥶 என்று சொல்கின்ற துணிவு நம்மில் ஒருவருக்கும் வராமல் போனதன் விளைவாக, உயிர் ஆதாரமான குடிநீர் விற்பனைப் பொருளாய் மாறிப்போனது. இன்று பணத்தையே இலவசமாகத் தருகின்றனர் என்றால் அடுத்து மொத்த நாட்டையும் விற்பனைப் பண்டமாக மாற்றப் போகின்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?*
*ஆனாலும், மக்களின் மனதில் உள்ளூர நப்பாசைகள் தட்டுப்படத் தொடங்கிவிட்டன. எப்பொழுது காசு வரும், முதல் வரிசையில் நின்று காசு வாங்கலாம் என்று காத்துக்கிடக்கின்றனர்.*
*ஒரு நாட்டின் உண்மையான மேம்பாடு என்பது அந்நாட்டின் மக்களும் அரசும் சுயசார்போடு வாழ்கின்றதா இல்லையா என்பதனைப் பொறுத்தே அமையும்.🤓🤓🤓🤓 இலவசங்கள் தருவதென்பது சுயசார்பு என்ற உணர்வையே அறுத்தெறியும் வேலை அன்றோ! இதனை இந்த நாட்டின் மக்களுக்கு யார் தான் கற்றுக் கொடுப்பது?* 🤔🤔🤔🤔🤔
*சுதந்திரத்தையே சுயராஜ்ஜியம் என்ற சொல்லாடலில் முழங்கிய ஒரு தேசத்தின் மொத்த மக்களும், கட்சிகள் அறிவிக்கும் பிச்சைகளில் சிறந்த பிச்சை எதுவென்று தேர்வு செய்து அவர்களுக்கு வாக்களித்து, அவர்கள் வழங்கும் பிச்சையை வரிசைக்கட்டி வாங்கிச் செல்வது அவமானம் அன்றோ!*
*முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பரமணியம்தான் சொன்னார், 'வெற்று வாக்குறுதிகளே சாதனைகளாக கொண்டாடுவது இந்திய ஜனநாயகத்திற்கு சாபக் கேடாய் மாறிப்போகும்' என்று. இதோ, இலட்சம் வங்கிக் கணக்கில் போடுவதாக வீராவசனம் பேசிய மோ____ அடுத்த தேர்தல்கால வெற்று அறிவிப்பு 6000 ரூபாய். 110 விதிகளின் நாயகி, வெற்று வாக்குறுதிகளின் தலைவி அம்மையார்
பு - வி ன் வாரிசு எ - மி அரசின் தேர்தல்கால சலுகை 2000 ரூபாய். இவர்கள் மக்களுக்கு போடப்போவதோ பட்டை நாமம் மட்டுமே.*
*இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு தோராயமாக 20 இலட்சம் கோடி. மத்திய மாநில அரசுகள் உலக வங்கியிடம் வாங்கியுள்ள கடன் 72 இலட்சம் கோடி. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இந்தியாவின் கடனை ஒருபோதும் அடைக்க முடியாது. நாடே அடமானத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும் இலவசங்களை இவர்கள் அள்ளி வீசுகிறார்கள் என்றால் இவர்களின் நோக்கம்தான் என்ன? சமூக மேம்பாடா? பொருளாதார சமநிலையா? மக்களின் மீது பற்றா? ஏழைகளின் மீது காதலா?*
*இல்லை... இல்லவே இல்லை...*
*நாளை காலை கசாப்புக் கடையில் வெட்டப்படும் ஆடாக இருந்தாலும், இன்று இரவு புல் போடுவது என்பது ஆட்டின் மீதான காதல் அல்ல... கடைசி தீனி... அவ்வளவுதான்...*
*வாக்காள பெருங்குடி ஆடுகளே...*
*பலி பீடத்தில் தலையைவைக்கும் முன் ஒரு முறை இலவசப் பிச்சைகளை வாங்கிவிட்டுச் செல்லுங்கள்...*
*வாக்கும் நாடும் விற்பனைக்கு வந்துவிட்டப்பின் இலவசங்கள் என்பவை மந்தைகளாய் மாறிய மனிதர்களுக்கு விருந்தாகத்தான் தெரியும்... ஆனால் அதுவே கடைசி தீனி என்பதை அந்த ஆடுகளால் உணரத்தான் முடியுமோ!*
- *பேராசிரியர்*

No comments:

Post a Comment