Sunday 28 September 2014

கலவரம்

ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் 

பிய்ந்து போன காலணிகள்

உடைந்து நொறுங்கிக் கிடக்கும்  

கண்ணாடிச் சில்லுகள் 

உறைந்துபோய் திட்டு திட்டாய் 

இரத்தக் குளங்கள் ...!

எரிந்து புகைந்துகொண்டிருக்கும் 

இருசக்கர வாகனங்களும் பேருந்துகளும் 

கதறிப் பரிதவித்த 

மானிட ஓலங்கள் தொலைத்து 

மௌனத்தை மட்டுமே சாட்சியாய் 

மிச்சம் வைத்திருக்கிறது 

கலவரம் ஒடுக்கப்பட்டு 

கலைந்து கிடக்கிற சாலை !








No comments:

Post a Comment