Wednesday 24 September 2014

சோறு

வெள்ளை வெளேரென 

தும்பைப் பூவாய் சிரிக்கின்றது 

புதிதாய் வடிக்கப்பட்ட 

வெண்சோறு 

பசித்திட்ட வயிற்றில் 

வளரும் தீயை அணைக்கப்போகிற திமிரில்

திமிரில் விழுந்தது இடி 

பணக்காரன் வீட்டு திருமண விருந்தில் ...!

குதப்பி அலைந்து மூடிவைத்த இலையில் 

முடங்கிப் போனது  சாதம்....

அவமானத்தில் கூனிக் குறுகிற்று...

குப்பைதொட்டியில் விழுந்தபோது...!

இறுதியில் 

எச்சில்   இலைப் பொறுக்கித் தின்னும் 

சிறுவன் கரம் பட்டு 

விக்கி அழுகிறது சோறு ...

விமோசனம் பெற்றதை எண்ணி ...!



No comments:

Post a Comment