ஒவ்வொரு தாயும்
தன் குழந்தைக்கு முதல் ஆசிரியர் ...!
ஒவ்வொரு ஆசிரியரும்
தன் மாணவனுக்கு இரண்டாவது தாய் .....!
இந்நன்னாளில் எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை ...
என் இரண்டாவது தாய்மார்களை
நினைவு கூர்கிறேன்.....!
தாயுள்ளத்துடன் எனக்கு
என் தாயினும் சாலப்பரிந்து என்பார்களே...
அது போல் என் மாணவப் பருவத்தை செதுக்கி வடிவமைத்த
ஆலிஸ் டீச்சர் ,மும்தாஜ் டீச்சர் ,ராஜாமணி டீச்சர் ,
ஜெயா டீச்சர்,சக்கரபாணி
சார்,பொன்னுரங்கம் சார், சாமிநாதன் அய்யா ,
அபுல் கையும் சார்,பாபுஜான்
சார்,ஆரோக்கிய ராஜ் சார் ,பொன்னுசாமி சார், சீனுவாசன் சார் ,
ஓவிய ஆசிரியர் கும்பலிங்கம் சார் ,ராமநாதன் சார்,
எனக்கு ஓவியத்தை முறைப்படி கற்றுக் கொடுத்த ஜீவானந்தம் சார்
என என் வாழ்க்கையை வளப்படுத்தி என்னை ஒரு ஓவிய ஆசிரியராக
உருவாக்கி வைத்து என் பணியை சிறப்பாக செய்யும்
மனோநிலையை எனக்கு அளித்து எனக்கு முன்னுதாரணமாக
வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கும் ...
காலவெள்ளத்தில்.... மறதியினால் .
..
இங்கு சொல்லப்படாமல் விடுபட்டுப் போன
அத்துணை ஆசிரியைகளுக்கும்
...ஆசிரியர்களுக்கும் ...என் மனம் நிறைந்த
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்.....
இதுபோல் இன்றும் தன்னலம் கருதாமல் தன்
மாணாக்கர்களின் நலம் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு
வாழ்ந்துகொண்டிருக்கும் சக ஆசிரிய ஆசிரியர்களுக்கும்
என் வாழ்த்துக்களை பரிமாறுகின்றேன் .
No comments:
Post a Comment