Monday 29 September 2014

விளையாட்டு

கோலி 

கண்ணாமூச்சி 

கில்லி தாண்டா 

மாண்டா பம்பரம் 

மாஞ்சா நூல் பட்டம் 

ஏழாங்காய் 

பச்சைக் குதிரை 

பல்லாங்குழி 

ஒரு குடம் தண்ணி மொண்டு ஒரே பூ பூத்தது ...

முல்லைப் பூவே முல்லைப் பூவே மெல்ல வந்து கிள்ளிட்டுப் போ 

என அத்தனையும் ஏப்பம் விட்டு 

சுட்டித்தனத்தை கட்டிப் போட்டு 

எங்கள் குழந்தைகளின் குழந்தைத் தனத்தோடு 

விளையாடிவிட்டது

தொலைக் காட்சி .










No comments:

Post a Comment