கலைகளெல்லாம் அள்ளித் தருபவளே
இளம் கன்னித் தமிழாய்த் திகழ்பவளே!
நல்ல கலைகளெல்லாம் அள்ளித் தருபவளே!
வீணையைக் கையினில் நீ எடுத்தாய்
தூய வெள்ளைக் கலையினையே உடுத்தாய்
வாணீ அமுதத் தேன் வடித்தாய்
சுவை வளரும் காவியம் பல கொடுத்தாய்
சுவை வளரும் காவியம் பல கொடுத்தாய்
நல்ல கலைகளெல்லாம் அள்ளித் தருபவளே
தூரிகைக் கையினில் நாம் எடுத்தே
பல வண்ணங்களை ஒன்றைக் குழைத்தே
கவின்மிகு சித்திரம் தீட்டிடுவோம்
அன்னை நாமகள் தேவியை வணங்கிடுவோம்
அன்னை நாமகள் தேவியை வணங்கிடுவோம்
நல்ல கலைகளெல்லாம் அள்ளித் தருபவளே
No comments:
Post a Comment