Tuesday 7 October 2014

அரிவாள் மூக்கு

கடலூர் சிதம்பரம் சாலையில் ...

திருச்சோபுரத்திற்கு அருகே உள்ளது 

அரிவாள் மூக்கு என்ற சிற்றுலாத் தலம் 

(சுற்றுலா அல்ல  -சிற்றுலா -பிக் நிக் ஸ்பாட் ) 

ஒரு குட்டி ஜெய் சல்மீர் பாலைவனத்தை 

நம் கண்முன் காணலாம் ஜெய்ப்பூர் போகாமலேயே ...

ஒருபுறம் பறந்து விரிந்த 

காற்று விளையாடிக்களித்த மணலலை படிந்த 

நிலப்பரப்பு ஒரு சிறு குன்றுபோல்...

மறுபுறம் அழகான வளைந்து 

அரிவாளை நினைவூட்டும் நதி நீரோட்டம் ...

கண்கொள்ளாக் காட்சிதான்  ...

குடும்பத்துடன் சென்று கண்டு விளையாடிக் களிக்க 

அதிகம் செலவு வைக்காத 

மன நிறைவை ...இயற்கையான குளிர்ந்த தென்றலை 

தவழவிடும் தளம்.

மாலை மூன்று மணிக்குமேல் ஆறு மணிவரை

ரம்மியமாக காட்சி அளிக்கும் இடம் 

அதற்குப் பின் அதாவது இருட்டியபின் சற்றே அச்சத்தை தோற்றுவிக்கும் ..

திருச்சோ புர நாதர் கோவிலும் வணங்கி மகிழத்தக்க திருத்தலம் .

அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது சிவலிங்க மூர்த்தி 

நால்வரால் பாடப்பட்டது .

ஒருமுறை சென்று வரலாமே! 


Add caption











No comments:

Post a Comment