அகத்தியர் அருவிக்குள் நுழைந்து
நாங்கள் குளித்துத் திளைக்கும் முன்
எங்களைக் கண்ட உற்சாகத்தில்
அமர்க்களமாய் அடம் பிடித்த
அருவி எனது காமிராவில் நுழைந்து
அடாவடியாய் அற்புதமாய்
முத்துப் பரல்களை
மழையைப் பொழிந்த போது ...
எங்கள் மனதில் தோன்றிய
மன மகிழ்ச்சி எனும் அருவியின் முன்
தான் தோற்றுப் போனதால்
ஹோ என்ற ஆர்பரிப்பு ஒலி எழுப்பி
மலையிலிருந்து கீழ்நோக்கி
தற்கொலை செய்துகொள்கிறதோ ...!
No comments:
Post a Comment