கிருஷ்ண சிந்து
பிருந்தாவனம் வளர் கண்ணன்
செய்யும் லீலைகளில் மன்னன்
நந்த கோபாலனின் மகனா யவன் வளர்போதினில்
செய்தான் பல லீலை ...கிருஷ்ண லீலை
லீலை ....கிருஷ்ண லீலை
( தன நன்னே தன நன்னே தானா )
பூதனை வதம்
பூதனையின் முலை கடித்து
கடும் வலிதாங் காதவள் துடித்து
அவள் பூதாகர உடல் சாய்ந்திட பாலாயவள் உயிர் பருகிய
கிருஷ்ணன் ...பால கிருஷ்ணன்
கிருஷ்ணன் ...பால கிருஷ்ணன்
( தன நன்னே தன நன்னே தானா )
நவநீத கிருஷ்ணன் ( வெண்ணைத் திருடி )
யாதவச் சிறுவர்கள் கூடி
வெண்ணைத் தாழிகளை யவன் தேடி
அவர் முதுகேறியே உறிசாய்த்திட சிறு கரம் கொண்டு
வழித்தள்ளியே தின்றான் வெண்ணை திருடி
திருடி... வெண்ணைத் திருடி
( தன நன்னே தன நன்னே தானா )
மண் தின்ற வாயன் ( புவனம் காட்டல் )
அன்று தின்றுவிட்டான் வெண்ணை
ஐயோ இன்றோ தின்கின்றானே மண்ணை
என்றே பதறிய தன்தாய் யசோதை வியந்திடவே
காட்டிவிட்டான் அவனும் வாயில் புவனம்
அவனும் வாயில் புவனம்
( தன நன்னே தன நன்னே தானா )
காளிங்க நர்த்தனம்
காளிங்க மடுவினில் குதித்தே
நாக காளிங்கனின் தலை மிதித்தே
அவன் வாலை யொரு கரம் பிடித்திட தன் காலை யவன்
அசைத்தாடிய நர்த்தனம் காளிங்க நர்த்தனம்
நர்த்தனம் காளிங்க நர்த்தனம்
( தன நன்னே தன நன்னே தானா )
கோவர்த்தன கிரிதாரி
இந்திர பூஜையைத் தடுத்தே
கோவர்த்தன மலைக் கதைக் கொடுத்தே
அதன் விளைவாய்க் கடும் மழை பெய்திட ஊர் மக்களின் உயிர் காத்திட
மலை பெயர்த்தான் குடையாய் பிடித்தான் .
கோவர்தனன் ..குடை பிடித்தான் .
( தன நன்னே தன நன்னே தானா )
துகில் கவரும் கள்வன்
கோபியர் எல்லோரும் கூடி
யமுனை நதியினிலே நீராடி
மகிழ் நேரந்தனில் துகில் வாரியே மரமேறியே சிரித்தானவன்
குறும்பும் மனம் விரும்பும்
குறும்பும் மனம் விரும்பும்
( தன நன்னே தன நன்னே தானா )
இராச லீலை
யமுனை நதிக்கரை யோரம்
முழு மதியொன்று உலவிடும் நேரம்
வேய்ங்குழலூதிட மனம் மயங்கிய கோபியரொடு
அவனாடிய லீலை ...ராச லீலை
லீலை ...ராச லீலை
( தன நன்னே தன நன்னே தானா )
பிருந்தாவனம் வளர் கண்ணன்
செய்யும் லீலைகளில் மன்னன்
நந்த கோபாலனின் மகனா யவன் வளர்போதினில்
செய்தான் பல லீலை ...கிருஷ்ண லீலை
லீலை ....கிருஷ்ண லீலை
( தன நன்னே தன நன்னே தானா )
பூதனை வதம்
பூதனையின் முலை கடித்து
கடும் வலிதாங் காதவள் துடித்து
அவள் பூதாகர உடல் சாய்ந்திட பாலாயவள் உயிர் பருகிய
கிருஷ்ணன் ...பால கிருஷ்ணன்
கிருஷ்ணன் ...பால கிருஷ்ணன்
( தன நன்னே தன நன்னே தானா )
நவநீத கிருஷ்ணன் ( வெண்ணைத் திருடி )
யாதவச் சிறுவர்கள் கூடி
வெண்ணைத் தாழிகளை யவன் தேடி
அவர் முதுகேறியே உறிசாய்த்திட சிறு கரம் கொண்டு
வழித்தள்ளியே தின்றான் வெண்ணை திருடி
திருடி... வெண்ணைத் திருடி
( தன நன்னே தன நன்னே தானா )
மண் தின்ற வாயன் ( புவனம் காட்டல் )
அன்று தின்றுவிட்டான் வெண்ணை
ஐயோ இன்றோ தின்கின்றானே மண்ணை
என்றே பதறிய தன்தாய் யசோதை வியந்திடவே
காட்டிவிட்டான் அவனும் வாயில் புவனம்
அவனும் வாயில் புவனம்
( தன நன்னே தன நன்னே தானா )
காளிங்க நர்த்தனம்
காளிங்க மடுவினில் குதித்தே
நாக காளிங்கனின் தலை மிதித்தே
அவன் வாலை யொரு கரம் பிடித்திட தன் காலை யவன்
அசைத்தாடிய நர்த்தனம் காளிங்க நர்த்தனம்
நர்த்தனம் காளிங்க நர்த்தனம்
( தன நன்னே தன நன்னே தானா )
கோவர்த்தன கிரிதாரி
இந்திர பூஜையைத் தடுத்தே
கோவர்த்தன மலைக் கதைக் கொடுத்தே
அதன் விளைவாய்க் கடும் மழை பெய்திட ஊர் மக்களின் உயிர் காத்திட
மலை பெயர்த்தான் குடையாய் பிடித்தான் .
கோவர்தனன் ..குடை பிடித்தான் .
( தன நன்னே தன நன்னே தானா )
துகில் கவரும் கள்வன்
கோபியர் எல்லோரும் கூடி
யமுனை நதியினிலே நீராடி
மகிழ் நேரந்தனில் துகில் வாரியே மரமேறியே சிரித்தானவன்
குறும்பும் மனம் விரும்பும்
குறும்பும் மனம் விரும்பும்
( தன நன்னே தன நன்னே தானா )
இராச லீலை
யமுனை நதிக்கரை யோரம்
முழு மதியொன்று உலவிடும் நேரம்
வேய்ங்குழலூதிட மனம் மயங்கிய கோபியரொடு
அவனாடிய லீலை ...ராச லீலை
லீலை ...ராச லீலை
( தன நன்னே தன நன்னே தானா )
No comments:
Post a Comment