Monday 5 March 2018

முக நூல் உள்ளீடுகள் .

இதெல்லாம் பெரிய  கொடுப்பினை சுரேஷ் ...வரம் வாங்கியிருக்கிறாய் ...நீ ... மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் !

நன்றி அண்ணா !
உம் பணிகள் நிறைவை ... பெருமையை அளிக்கின்றன ... மகிழ்ச்சி ...உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் ...! வருங்கால ஓவியர்களை உருவாக்கும் உம் அர்ப்பணிப்பு பணி  தொடரட்டும் ...

 அடை மழையில் நனைய யாரும் விரும்புவதில்லை ...
 தூறல் மழையின் சாரல்தான் எல்லோருக்கும் பிடிக்கும் ...
 அவ்வளவு ஏன் ...நானே தூறலின் சாரலில் ரசிகன்தானே ..

ஆமாம் அண்ணா ,,,நண்பர்களுக்கு  ஒதுக்குவதில் அலாதி இன்பம் கொள்பவர் ...நானே பல முறை நேரில் கண்டிருக்கிறேன் ...எனக்கும்கூட வியப்பைத் தருபவர் !

மிக மகிழ்ச்சி ...மாலை வணக்கம் !

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரண்ராஜ்

வாழ்த்துக்கள் பிரவீன்
தொடரட்டும் உமது பசுமைப் பணி

இந்த காட்சிகளை நானும் கண்டுள்ளேன் ... எனது கைபேசியில் படம் பிடித்துள்ளேன் ... அனுபவத்தை கண்முன் மீண்டும் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் ...!

மற்றுமொன்று சொல்ல வேண்டும் ...அங்குள்ள சிப்பந்திகள் இனிய உபசரிப்பு ...!


இந்த விழா தனி சிறப்புமிக்கது ...91 வயது இளைஞர் திருகி குரல் குறித்து வெளியிட்ட 90 ஆவது நூல் திருக்குறள் களஞ்சியம் ...அதன் வெளியீட்டு விழா இது...!இதை பற்றி தனியே ஒரு பதிவு நேரம் கிடைக்கும்போது

உண்மைதான் அண்ணா

மைதீன் ...முதலில் சாரி ...உங்கள் பதிவுகள் மட்டுமல்ல ...   பல நண்பர்களின் பதிவுகளைக்
கூட சில நாட்களாகக் காண முடிவதில்லை ...தேர்வு நேரம் அல்லவா ...அப்படியே இணையம் வந்தாலும் கூட  நுனிப்புல் மேய்வதுபோல சில லைக் ,சில ஷேர் என உடனே நழுவிவிடுவேன் ....இன்று கொஞ்சம் நேரம் கிடைத்ததில் ( வலுக்கட்டாயமாக உண்டாக்கிக் கொண்டதில் --அதுவும் எனது பள்ளியின் நூற்றாண்டு விழா பற்றிய பதிவை இடுவதற்காக முக நூல் வந்தபோது உங்கள் பதிவு நோட்டிபிகேஷனில் இருந்ததைக் கண்டேன் .உடன் முழுதும் வாசித்தேன் ...! வழக்கம் போல் நடந்ததை நேரில் காணும் வண்ணம் இருக்கும் வர்ணனைப் பதிவு... உங்கள் நடைக்கு கேட்கவா வேண்டும் ...?

அப்புறம் தோழர் சண்முகம் போல நானும்  எனது வீட்டில் புத்தக ஷெல்பில் வயிறு  பக்கம்  தெரியுமாறு    நூல்களை அடுக்கிவிடலாமா என்கின்ற எண்ணம் வருகிறது ,,,,
ஏப்ரல் -23 உலகப் புத்தக தினம் வருகிறது ஏதாவது வித்தியாசமாக ஏற்பாடு செய்யலாமா ... புத்தகக் காதலர்கள் பங்கேற்கும்படியாக ...? யோசிக்கவும் ..!

குங்கிலியக் காடு  ..உங்கள் பதிவுக்கு முன்னர் நான் அந்நூலை படிக்கவேண்டும் ...எங்கு கிடைக்கும் ? பெயரின் நறுமணமீ வாசிக்கத் தூண்டும் போலிருக்கிறதே ... கிடைக்க அல்லது படிக்க ஏற்பாடு நீங்கள்தான் செய்யவேண்டும் ...ஆவலுடன் காத்திருக்கிறேன் !
குறிப்பாக  உங்கள் பதிவின் நாயகர் இளங்கவி அருள் அவர்களின் இலக்கிய புலமைக்கு & அவரின் கொடைத்தன்மைக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ..அப்படியே தோழர் சுகிர்தராணி அவர்களின் பெருந்தன்மைக்கும் எனது பூங்கொத்துக்கள் !
நன்றி மைதீன் !
நானேதான் அண்ணா
நன்றி சாரதி
அரும்பு மீசைப் பருவத்தில் தலை நிறைய கேசம் ஒன்றும் ஆச்சரியமில்லை ...மஞ்சு ...அப்படி இருந்த நான் இப்படி ஆனதுதான் ஆச்சரியம் ...போயும் போயும் ஆண்டவன் என் கேசத்தின் மேல்தானா கண்வைக்க வேண்டும் ... ம்.. பழசை எண்ணி ...பெரு மூச்சு விடறது தவிர வேற வழியில்லை...



No comments:

Post a Comment