Tuesday 13 March 2018

ரம்மியக் காட்சி

தஞ்சை பெரிய கோவிலுக்கு ஒரு திடீர் பயணம் ...
ஞாயிறு அன்று ....
ஞாயிறு மறையும் வேளை ...
எனது திறன் பேசியின் கண்கள் அவ்வப்போது
தனது  கண்ணில் பட்ட காட்சிகளை
தன் நினைவுத் திரையில் சேகரித்துக்கொண்டது .
சிவகங்கைப் பூங்காவில் தனது  இலைகளையெல்லாம்









தொலைத்துவிட்டு நின்றிருந்த ஒரு ஏகாந்த மரம் ...
கதிரவன் கொடுத்துக்கொண்டிருந்த
அந்த நாளைய நிறைவு ஒளியின் பின்புலத்தில்
ராஜ ராஜன் கட்டிய தட்சிண மேருவின்
ரம்மியக் காட்சி
உங்கள் விழிகளுக்கு விருந்தாக ..





No comments:

Post a Comment