Sunday 24 December 2017

முகம் -100 ஒரு சித்திரச் சுனாமி

முகம் -100    ஒரு சித்திரச் சுனாமி
            
          டிசம்பர் -26 என்றதும் சுனாமி தினம்தான்  நமக்கு  நினைவுக்கு  வரும்...
           ஆனால்  அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது 23-12-2017 அன்று கடலூரில் ஒரு சுனாமி வந்தது ...
          ஹலோ ..ஹலோ ...சுனாமி என்றதும் உடனே டர்ர்ர்ரடித்து டெரர் ஆக வேண்டாம்...அது சித்திரச் சுனாமி ...
           
      கடலூரில் a r ஓவிய பயிற்சிப் பட்டறையை நடத்திவரும் ஓவியக்  கலைஞர் திரு ராஜசேகர் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டினால் கடலூர் வள்ளி விலாஸ் ரெசிடென்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஓவியக்  கண் காட்சியைத்தான்  இவ்வாறு குறிப்பிட்டேன் ...!

( இடம் - அடையாறு ஆனந்தபவன் உணவகம் அருகில்  ,நியூ சினிமா தியேட்டர் ஸ்டாப்  இறங்கவும் )

           புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்தின் பேராசிரியர் 
உயர்திரு .ராஜ ராஜன் அவர்கள் திருக் கரங்களால் துவக்கி வைக்கப்படும் பேறு பெற்றிருந்தது இக்கண்காட்சி.

         முழுக்க  முழுக்கராஜ சேகர் அவர்களின்  பயிற்சிக் கூடத்தில் அவரிடம் முறையாக சித்திரம் பயின்ற இளைஞர்களை பங்கேற்கச் செய்துள்ளார் .ஓவியர் காமராஜ்  மட்டும் இதில் விதிவிலக்கு .B .S c  கெமிஸ்ட்ரி படித்த சற்றே நடுத்தர வயதான இளைஞர் .இந்த வயதில் ஓவியம் கற்று கண்காட்சியிலும் பங்கேற்றிருக்கின்ற இவரது சித்திரக் காதலை -ஆர்வத்தை பாராட்டியே ஆக வேண்டும்.நான் போகும்போது மகன் ,மகள் என்று குடும்பமே கூட இருந்தது ...!

      மற்றும் சட்டம் பயின்றவர் ,வருமான வரித்துறை அலுவலர் என்று தொழில்முறை அல்லாத ஓவியர்களும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள்.

        9 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியும் இவர்களுள் அடக்கம்  . 

       மொத்தம் ஒன்பது பிரம்மாக்கள் இந்த 100 முகங்களை படைத்திருக்கிறார்கள்.உலகம் முழுவதிலும் உள்ள வெவ்வேறு கால கட்டத்தைச் சார்ந்த வெவ்வேறு துறையின் ஆளுமைகளை ஒரே இடத்தில் நாங்கள் சந்தித்து உரையாடும்படி செய்திருந்தார்கள்.

       ஆம்...சித்திரம் பேசுதடி என்பார்கள்.எங்களை பொறுத்தவரை அங்குள்ள சித்திரங்கள் அனைத்துமே எங்களிடம் பேசின என்றுதான் கூறவேண்டும்/.

       M .S  சுப்பு லட்சுமி ,M .S விஸ்வநாதன் ,இளைய ராஜா ,A .R ,ரகுமான் என்ற இசை ஆளுமையில் தொடங்கி  ஹிட்லர் ,காந்தி ,அண்ணா, சிவாஜி, 
எம் ஜி ஆர் ,ஜெயலலிதா ,மலாலா ,டெண்டுல்கர் , P .T . உஷா ,
பாரதி ,பாரதி தாசன் பெரியார் ,சேகு வேரா
 ,பிரபாகரன், K .பாலச்சந்தர் ,அப்துல்   கலாம் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை ..

      அதே போல் அனைத்துமே போர்ட்ரைட் என்று சொல்லப்படும் மார்பளவு ஓவியங்கள் மட்டுமே வரையப்பட்டு இருந்தன,
.        பென்சில்,சார்க்கோல் ,கலர் பென்சில் ,வாட்டர் கலர் ,போஸ்டர் கலர், ஆயில் பேஸ்டல் இவைகொண்டுமட்டுமே ஓவியங்கள் தீட்டப்பட்டு இருந்தன .

         நாங்கள் காலை சரியாக 10 மணிக்கு அரங்கிற்குள் செல்லும்போது எங்களை வரவேற்றவர்  ஓவியர் மற்றும் முக நூல் நண்பர் திரு. காமராஜ் அவர்கள்.அவர் வரைந்த இசையமைப்பாளர் M  S விஸ்வநாதனின் முகம் ...என்னப்பா ...இப்போதுதான் வந்தாயா என்று விசாரிப்பதுபோல் இருந்தது .அவ்வளவு இயல்பு ...ஆயில் பேஸ்டல் ஓவியம் .
         
இதுதவிர  வளரும் ஓவியர்களான செல்வன்.முத்துக்  குமரன்,
செலவன் யுவராஜ் ,செல்வன் ஆகாஷ் போன்றவர்களும் தங்கள் ஓவியங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர் .

ஓவியர்களின் மாஸ்டர் பீஸ் ..

K .காமராஜ்.----M .S ,விஸ்வநாதன் 

K .செங்குட்டுவன்---பிடல் காஸ்ட்ரோ 

C .சதீஷ் ------முத்து ராமலிங்க தேவர் 

M .K .அருண் பாபு --- ஆர்க்காட்  ராமசாமி  முதலியார் 

M ,முத்துக்குமரன் ---கே .ஜே .ஜேசுதாஸ் 

R .யுவராஜ் ---ஓவியர் சால்வடார் டாலி 
                 எப்பா ... மிரட்டல் பார்வையும் குத்தி நிற்கும் மீசையும் ...! ராத்திரி கனவுலயும் வந்து மிரட்டும் போல ...ஓவர் ஆல் என் ஒட்டு மொத்த ஓட்டு இந்த ஓவியத்திற்குத்தான் ...ஒரு கொசுறு  தகவல் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்துல வருகின்ற வடிவேலு  மீசை  இவரை வைத்துதான் வடிவமைத்தாராம் இயக்குனர் வசந்த பாலன் ...!

R .தினேஷ் குமார் -------இயக்குனர் கே.பாலச்சந்தர் 

P .ஆகாஷ் -------அறிஞர் அண்ணா 

செல்வி S .சத்திய வதனா--------மலாலா . 

இது எனது பார்வையில்தான் ...! உங்களை பார்வைக்கு ,ரசனைக்கு ஏற்ப உருவங்கள் மாறலாம் 

சிறப்பு ஓவியர்களே ...சிறப்பு ....! மேலும் வளர்க ! வருடந்தோறும் உங்கள் சித்திரப் படைப்புகள் தருக !
HATS OFF  ராஜசேகர் .....!

           விடுமுறை துவங்கியுள்ளதால் நிறைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வந்து ஓவியங்களை ரசிப்பதையும் பார்க்க முடிந்தது .

           ஓவியர்களின் இம்முயற்சிக்கு என் அன்புப்  பரிசாக  எனது மனவண்ணங்கள் -கவிதைத் தொகுப்புநூலை அளித்து விடைபெற்றேன் .

         கண்காட்சியைப் பார்வையிட்ட அனைவருக்கும் , பசுமையை வளர்த்தெடுக்கும் நோக்கில் தாவரக் கன்றுகள் பரிசளிக்கப்பட்டது பாராட்டுக்குரியது .
      
     எங்கள் பள்ளி மாணவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு ஓவியர்களிடம் உரையாடி நிறைய அனுபவங்களை பெற்றுத் திரும்பினார்கள் என்று சொன்னால் அது மொக்கையாக இருக்குமோ என்னவோ ! எனவே தலைப்பிற்கு ஏற்பவே முடிப்பும் இருக்க வேண்டுமல்லவா ?

          நாங்கள் அனைவரும் சித்திரச் சுனாமியில் சிக்கி நீந்தி ரசித்து சிலிர்த்து  ஆர்வம் என்னும் முத்தெடுத்து வந்தாச்சு  ...!


         அப்போ நீங்க...?
   
          சீக்கிரம் போங்க ....அரையாண்டு விடுமுறையில் உங்க சுட்டீஸ அழைச்சுக்கிட்டு...! 












          















     


No comments:

Post a Comment