Saturday 16 December 2017

எங்க குறைய கேளுங்க

எங்க குறைய கேளுங்க

உழவன் இங்க இல்லையின்னா
சோத்துக் கெங்க போவீங்க
கழனி யெல்லாம் காஞ்சதுன்னா
நீங்க என்ன ஆவீங்க

பண்பாட்டை காக்க னுன்னு
மெரீனாவில் கூடி னீங்க
ஜல்லிக் கட்டு போட்டியில
மாட அவுத்து விட்டீங்க

தலை நகரு டில்லியில
போராட்டம் பண்ண வந்து
உடுப்பு அவுத்து நிக்கறோமே
என்ன பண்ணப் போறீங்க

மானம் போயி டுச்சே
வயலு வீரல் விழுந்துடுச்சே
உங்க கவனமெல்லாம் திருப்பனுன்னு
எங்க மானம் பறந்திடுச்சே

நாட்டோட முதுகெ லும்பு
விவசாய மென்றெல்லாம்
ஏட்டில்  மட்டும் எழுதி வெச்சு
என்ன பண்ண கூறுமய்யா

ஓட  ஓட  விரட்டிப் புட்டு
முது கெலும்ப ஒடச்சுப் புட்டு
எழுந்தெம்ம நிக்கச் சொன்னா
எப்படிய்யா நாங்க நிப்போம்

எம்பொண்டாட்டி புள்ளைங்க
பசியாற வேணுமுன்னா
ஒண்ணுமில்ல எங்க கிட்ட
எத்த கொண்டு எங்க விக்க

    கவிதை தொடரும்....






















No comments:

Post a Comment