Sunday 10 December 2017

அக்னிக் குஞ்சே என் அன்பான ..பாரதியே.!

அக்னிக் குஞ்சே என் அன்பான ..பாரதியே.!

பாரதத் திருநாட்டின் கவிப் புதல்வனே 
பாரதத்தை பார்க்கே திலகமாக்கி சூட்டி மகிழ்ந்த பாரதியே 
சுதந்திரச் சூரியனின் கதிர்களை பேரொளியை 
பாரதத்தில் பரவாமல் தடுத்திட்ட ஆங்கிலேயக் காடுகளை 
விடுதலை உணர்வை கவிதை  நெருப்புகளாய் வீசியெறிந்து 
வனமழித்த எம் அக்கினிக் குஞ்சே ...
வெந்து தணிந்தது காடு...உன்னால்
வந்தது ஆனந்த சுதந்திரம் அன்று....!

ஆனால்...அந்தோ 
இன்று கொள்ளையர் கூட்டத்தால் காரிருளில் மூழ்கி 
கதிரொளியாம் ஆனந்தம் தொலைத்து  
கதியற்றுக் கிடக்கிறாள் பாரதத் தாய் 
அவள் இன்னல் களைய வேண்டாமா ?
இன்னுமேன் தயக்கம்....?
ஊழல் பேய்களை ஓட ஓட விரட்ட 
உன் துணை வேண்டும் எமக்கு .

அக்கினிக் குஞ்சே என் அன்பான பாரதியே ..
விண்ணுலகம் துறந்து வா ...!
அழைக்கிறோம் விரைந்து வா...!
எமை நோக்கிப் பறந்து வா ...!
மீண்டும் ஒருமுறை பிறந்து வா...!
அக்கினிக்  குஞ்சே என் அன்பான பாரதியே ...!
மீண்டும் நீ பிறந்து வா ...!





No comments:

Post a Comment