Monday 25 December 2017

மலரும் நினைவுகள்

          மலரும் நினைவுகள்



விடுமுறையைப் பயன்படுத்தி பழைய புகைப்படங்களைத் தேடியதில் சில படங்கள் கிடைத்தன ...வாழ்வின் பொற்காலங்களை நினைவு படுத்தும் பதிவுகள்....உடனே ஸ்கேன் செய்து அவற்றை தொடர்புடைய மாணவர்களின் டைம் லைனில் பகிர்ந்தேன் ...கோபி ராஜா ,விநாயக மூர்த்தி மற்றும் ராஜதுரை ஆகியோர்தான் அந்த பாக்கிய சாலிகள் ...காடாம்புலியூரில் ஆர். கே அரசுமேல்நிலைப் பள்ளியில் நான் பணியாற்றியபொழுது அங்கு படித்த என் மாணவ நட்புக்கள் ...இப்பொழுது முக நூலிலும் நட்பைத் தொடருகிறார்கள்.வேறு சில மாணவர்களின் படப்  பதிவுகள் கிடைக்கும்பொழுது அவர்களுக்கும் பகிர்வேன்.அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்தபொழுது எடுத்த பொக்கிஷமும் கிடைத்தது .அதை விடுவேனா என்ன ?

அப்பொழுது எங்கள் வகுப்பு ஆசிரியரும் சமூக அறிவியல் ஆசிரியருமான திரு சக்கரபாணி அவர்கள் ...நிறைய கதைகள் கூறுவார் என்று முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேனே ,,,எங்கள் அபிமானத்திற்குரிய ஆசிரியர் .அவர் காலடியில் சற்றே தள்ளி கழுத்தில் டை கட்டி ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறானே ...அவன் வேறு யாருமில்லை நண்பர்களே ..நானேதான் .

எனது மலரும் நினைவுகள் ....கருப்பு வெள்ளையில் ...காலத்தை வென்றவை

...!

இதில் உள்ள வகுப்புத் தோழர்கள் சிலர் எங்கள் ஊரிலேயே என்னுடன் தொடர்பில் இருந்தாலும் பலர் எங்கிருக்கிறார்களோ ...இப்பதிவு அவர்களை கண்டுபிடித்துத் தருமா?



No comments:

Post a Comment