Thursday 21 December 2017

வழியிலோர் வரவேற்பு

வழியிலோர் வரவேற்பு

இல்லத்திலிருந்து கிளம்பும்போது
கரமசைத்து புன்னகைத்து
என்னை வழியனுப்புவது என்னவோ
எனதில்லத்தரசிதான்
சாலை முனையில்
வழியிலேயே வரவேற்பவளும்
ஒருத்தி உண்டு ...நம்புங்கள்
பேருந்துச் சாலையைத் தொடுமுன்
எனக்கு சாலையிலே வரவேற்பு
வேலியோரக் குறுமரம் ஒன்று
வான்  தொடப் பார்த்து
தன் எல்லை மீறி
என் வழியில் குறுக்கிட்டு
நீல வான் பின்னணியில்
தென்றல் காற்றுக்குத்
தன தலையாட்டி என்னை
வரவேற்றுச் சிரிக்கிறது
சூரியகாந்திக்குச்  சவால்  விடும்
தன்னில் பூத்த
மஞ்சள் பூக்கள் கொண்டு
தினம் தினம் !
என்னவளிடம் சொல்லிவிடாதீர்கள்
தன சக்களத்தியாய்
தாவர இனங்களைக்கூட
ஏற்க மறுப்பவர்கள் நம் தமிழச்சிகள் ...!


No comments:

Post a Comment