போதும் காதலை வாழ விடு
விடியுது விடியுது புதுயுகம் பிறக்குது
சாதி இருளுக்கு விடையைக் கொடு
அன்று தொடங்கி இன்று வரைக்கும்
காதலுக்கு அழிவில்லை கவலை விடு
சாதியின் பெயரால் காதலைப் பிரிக்கும்
கயமை உறவை எரித்து விடு
காதலுக் கெதிராய் எவர்வந் தாலும்
கதையை முடிப்போம் வாளை எடு
சாதி வெறியினால் ஆணவக் கொலைகள்
புரிவோர் சிரங்களை அறுத்து எடு
காதலின் உணர்வுகள் கயவர்கள் அறியட்டும்
அதுவரை அவர்களைப் புடைத்து எடு
காளையின் உரிமை மீட்க்கக் கிளம்பிய
மெரீனாக் கடலே வந்து விடு
காதலைக் காத்திட வேண்டும் உடனே
இளையோர் படையே ஒன்று படு
சாதிகள் ஆயிரம் ஆயினும் கூட
செந்நீர் ஒன்றே அறிந்து விடு
ஏனைய சாதிகள் அழித்திவ் வுலகில்
காதலர் சாதியை வாழ விடு
உலகே திரண்டு காதலை எதிர்த்தால்
பிரபஞ்சம் முழுதும் பொசுக்கி விடு
காதலர் உயிரை எடுத்தது போதும்
போதும் காதலை வாழ விடு.
இது காதலர்களின் தேசிய கீதம்
No comments:
Post a Comment