Wednesday 13 December 2017

போதும் காதலை வாழ விடு

                                                போதும் காதலை  வாழ விடு


விடியுது விடியுது புதுயுகம் பிறக்குது
          சாதி  இருளுக்கு விடையைக் கொடு
அன்று தொடங்கி   இன்று வரைக்கும்
          காதலுக்கு அழிவில்லை கவலை விடு

சாதியின் பெயரால் காதலைப் பிரிக்கும்
         கயமை உறவை எரித்து விடு
காதலுக் கெதிராய் எவர்வந் தாலும்
         கதையை முடிப்போம் வாளை எடு

சாதி வெறியினால் ஆணவக் கொலைகள்
         புரிவோர் சிரங்களை அறுத்து எடு
காதலின் உணர்வுகள் கயவர்கள் அறியட்டும்
        அதுவரை  அவர்களைப் புடைத்து எடு

காளையின் உரிமை மீட்க்கக்  கிளம்பிய
        மெரீனாக் கடலே வந்து விடு
காதலைக்  காத்திட   வேண்டும் உடனே
         இளையோர் படையே ஒன்று படு

சாதிகள் ஆயிரம் ஆயினும் கூட
         செந்நீர் ஒன்றே அறிந்து விடு
ஏனைய சாதிகள் அழித்திவ் வுலகில்
         காதலர் சாதியை வாழ விடு

உலகே திரண்டு காதலை எதிர்த்தால்
         பிரபஞ்சம் முழுதும் பொசுக்கி விடு
காதலர் உயிரை எடுத்தது போதும்
         போதும் காதலை வாழ விடு.


இது   காதலர்களின்  தேசிய கீதம்








No comments:

Post a Comment